Popular Posts

Monday, August 22, 2011

பின்னலாடை பிணைக்கைதிகள் !!!



பின்னலாடை பிணைக்கைதிகள் !!!

"திரு"ப்பூர்

மரியாதை மிகுந்த ஊர்

மரியாதை மிகுந்த மனிதர்கள் வாழும் ஊர்

பின்னலாடையில் பின்னி பினைந்த

பிணைக்கை கைதிகளாய் பிள்ளைகள்

சிப்டுகளால் சின்னாபின்னமான

சில்லரை சிறார்கள்

சாயப்பட்டறைகளில்

சாயங்கள் உடன் பல காயங்களுடன்

பிழைப்பை ஓட்டும் பிள்ளைகள்

கள்ளம் கபடம் இல்லா

"கன்று குட்டிகளை"

"காளைகளாக்கி"

காசு பார்க்க துடிக்கும்

கல் நெஞ்ச பெற்றோர்கள்

இதயம் வலிக்கிறது

இருந்தாலும் ஓர்

இதம், தொழிற்சாலை வாசலில்

”இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இல்லை”

Sunday, August 21, 2011

பகுத்தறிவு பகலவர்களே !!




சரணங்களின்
பொருள்
மாறுவதால்
தவறாகிப் போகும்

கீதங்கள்
எய்ட்ஸ் அரக்கனின்
சிறைப் பறவைகளாய் . . .
சில்லறைக் கனவுகளாய். .
மரண மேடையில்
மணம் இழந்த
மலர்களாய்
மனிதர்கள் சில … !!!

நாளைய
இந்தியாவை
நொறுகி போட துடிக்கும்
இன்றைய

‘இராவணன்’

மனிதத்துக்கும்
மருத்துவத்துக்கும்
நிர்ணியக்கப்பட்ட
மரண சவால்….. !!!

இலக்கற்ற
தடுமாற்றங்களில்
விளையும்
இயல்பற்ற
நரக வாழ்கை . . . . !!!

உடல் ஆசைகளையும்
உணர்ச்சிக்கு கலவரங்களையும்
உரசி
உயிரை பற்றவைக்கும்
ஊழித் தீ ! . . .

உணர்ந்தும்
உணராமலும்
செய்யும்
தப்புகளுக்கு
மீட்பே அளிக்காமல்
விரும்பி வரும் வேண்டாத
நோய் அரக்கன் . . . !

மனிதத்துக்கும்
மிருகத்திற்கும் இடையிலிட்ட
நூலிழையாம்
பகுத்தறிவை
பதம் பார்க்கும்
பாதகன்!!!!

மனிதமே !
மனிதமே
உன்னை தராசிலிட்டு
சீர்தூக்கிப் பார்க்க

ஒரு நிமிடமேனும் ஒதுக்கி
பகுத்தறிவு பகலவனுக்கு
உன் இதய வாசலை திறந்து வை

உன் ஆற்றலையும்
ஆர்வத்தையும்
நல்வழியில்
நடத்தி வாழ்கை கனியை
சுவைக்க
கற்று கொள்

காலம் உனக்கு
காதலையும்
காமத்தையும்
தெளிவு படுத்தும். . .

வாழ்கையை
காதலிக்க கற்று கொள்
காமம் தானே
முன்வந்து
எல்லை இட்டு கொள்ளும் . . !

இறைவன் தந்த பரிசான
உடலையும்
உயிரையும், வாழ்க்கையையும்
”உயர்” நிலை படுத்தி கொள்

ஆயின்

பகுத்தறிவு
நிரம்பி
மனிதத்துவம்
உயிர் பெறட்டும்
மகத்துவமாய்
ஜெகம் ஆளட்டும் . . . !!!

Friday, August 12, 2011

முதியோர் இல்லம்







மரத்தின் மடியில்
மகன்கள்
முதிர்ந்த இலைகள் சருகுகளாய்
முதியோர் இல்லத்தில் . . . . .

Monday, July 18, 2011

பட்டாம் பூச்சு




பட்டு பட்டு

பட்டாம் பூச்சுகளுக்கு (பெண்கள்)

பட்டு நுழால் பட்டாடை

பரிதவிக்கிறது மனம்

பட்டு பூச்சுகளுக்கு,

உயிரை கொன்று

உயிரற்ற உறைகளில்

உயிர் நூலால்

உடை ஒன்று தேவையா- கேட்கிறது

பட்டாம் பூச்சு

புலன்களை மறைக்க

ஆடை தேவை

உயிரை கொன்று

உயிரை வளர்க்க வேண்டுமா?

மல்பெரி கேட்கிறது


நவரச ரசிகன்


ரசிகன்

"ரசி" த்தான் ரகளை ஆனது

"ருசி" த்தான் ருத்தர தாண்டவம் ஆனது

"பசி" த்தான் பரலோகம் சென்றான்

"குஷி" தான் நடிகனுக்கு

ரசிகனை ரசிக்க வில்லை

ரசம் குடிக்கும்

ரதிகளின் கனவு நாயகனுக்கு...

Sunday, July 17, 2011

வெயில் நட்பு, பாலிய சினேகிதம்




உச்சி வேளை

கையில் குடை இல்லை

காலில் செருப்பு இல்லை

பையில் பணம் இல்லை

கானல் நீரில் எங்கோ பார்த்து

பல நாட்கள் பயனித்து

தோளோடு தொள் கொடுத்த

தோழமை

முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து

முகத்தை முகர்ந்து

நட்பே நலமா என்க

சுட்டெரிக்கும் சூரியனும்

குளிரும் நிலவானது

நண்பனை ஆரத்தழுவி

நண்பா வா , காப்ப்பி சாபிடலாம் என்க

உண்மை நட்புக்குள் ஏன் வீண் உபசரிப்பு

உண்மை விளங்கியது

என் நட்பிற்கு என்னிடம் எதுவும் இல்லை

உண்மை நட்பை தவிர.

Wednesday, July 13, 2011

கிடா விருந்து



கிடா விருந்து

சில உறவுகள் மேம்பட

பல உயிர்களை கொன்று

பலரும் சேர்ந்து உண்ணும்

விருந்து

கிடா விருந்து. . .

மானம் கெட்ட மனிதாபிமானம்


காலையில்

சாலையில்

கலங்க வைக்கும் விபத்து,

விபத்தின் மடியில் ஒருவன்..

லிட்டர் ரத்தம் ஆறாய் ஓட

நூறு பேர் கூடி 108 அழைத்தும்

நூறு நிமிடம் ஆகியும் வரவில்லை 108

இறுதியில் வந்தது இறுதியானது..

உச்சு..... உச்சு .... என்று

உச்சு கொட்டி விட்டு

"யாரு பெத்த புள்ளையோ" என்று

ஒற்றை வார்த்தையை

ஒருமையில் உதிர்த்து விட்டு கிளம்பினேன் அங்கிருந்து. .


போலியான மனிதாபிமானம்,

மானம் கெட்ட மனிதாபிமானம். . .

Wednesday, May 18, 2011

காதல் தேசம்




”திரு”ப்பூர் – திரு - திருமதி

பெண் மங்கையானாள்

நிச்சயம் ஆனது ஒரு

திரு திரு முழியுடன்
ஆம் அது

நிச்சயம்
நிச்சயம் செய்யப்பட்ட மணம்.,

இடையே
இடைவெளியில்
இனம் புரியாத உரசல்

தீ பொறி வார்த்தைகள் வார்த்தையின் சூடு மறைவதற்குள்
கொள்ளி வைப்தற்கு முன் ஏற்பாடாய் ..

எல் பீ ஜீ வெடித்த்து

பெண் பிணமானால்

திரு திரு முழிக்கோ மற்றுமொறு
திருமணம்.

பெண் என்ன ஆனாள் ??

காதலித்து
ஜாதி அளித்து
திருமணம்
செய்தாள் பெண்
திருப்பூர் வந்தாள்
திருப்பதி போனாள் மட்டும்
திருப்பம் வரும் என்பது பழைய மொழி
திருப்பூர் வந்து உழைத்தாலும்
திருப்பம் ( நல்ல) வரும்
திருப்த்தியும் செல்வமும் வரும்
தீராத பிரச்சனைகள் தீரும் இங்கு
தீண்டதகாதவர்கள் என்று எவரும் இல்லை . .
திருப்பூர் ஒர் காதல் தேசம்....

Wednesday, May 11, 2011

சாயுமோ சந்ததி ?




சாயுமோ சந்ததி ?

சாய்ந்த பைசா கோபுரத்தை

சாதனை என்ற பெயரில்

சரி செய்த நீ

சாலை விஸ்த்தரிப்பு என்ற பெயரில்

சாயும் மரங்களை

சமன் செய்வது எப்போது ? ? ?



சமன் செய்ய
மரம் வளர்போம்
மண் வளம் காப்போம்

Monday, May 9, 2011

ஓ சோனா





ஒ பெண்ணே
ஓ சோன் பெண்ணே
உன் திரை சீலையில்
எத்தனை . . . .
எத்தனை . . . .
ஓட்டைகள் . . .

அரை வினாடி இன்பத்திற்க்காக
ஆறாம் விரலாய்
சிக்ரெட் புகையினால்
ஓட்டையாகிறாய்

தொலைவில் இருக்கும் உன்னை
தொட ஆசை படும்
தொழிற்சாலை புகையினாலும்
ஓட்டை ஆகிறாய். . .

உலக மாந்தர்களின் மகதான உயிரை
உரியாமல் புற ஊதா கதிர்களில் இருந்து காக்கிறாய்

இது எத்தனை நாளுக்கு தான் முடியும்-------?

புகையை குறைப்போம்,
ஓ சோன் பெண்ணை வாழ வைப்போம். . . .
மரம்
வளர்போம்
மழை
பெறுவோம்.

Wednesday, May 4, 2011

தேவியர் இல்லம் திருப்பூர்: கல்வி -- பலமான ஆயுதம்

தேவியர் இல்லம் திருப்பூர்: கல்வி -- பலமான ஆயுதம்
மிக அருமை
காலத்தின் தேவை அறிந்து வரைந்த பதிவு
தொடரட்டும் நும் பணி
வாழ்க வளமுடன்

அம்புலி அழுகிறது



அம்புலி அழுகிறது

அன்பே ஆருயிரே
அன்னமே அம்புலியே
என் அமுதே
என்று அம்புலியை காண்பித்து அன்னம் புகட்டும்
என் அன்னபூரணி அம்மா
எனக்கு மட்டும் அன்னம் புகட்ட வில்லை
ஏன் என் அன்னபூரணி அம்மா . .
அழுகிறது அம்புலி பாப்பா. . . .