Popular Posts

Monday, August 22, 2011

பின்னலாடை பிணைக்கைதிகள் !!!



பின்னலாடை பிணைக்கைதிகள் !!!

"திரு"ப்பூர்

மரியாதை மிகுந்த ஊர்

மரியாதை மிகுந்த மனிதர்கள் வாழும் ஊர்

பின்னலாடையில் பின்னி பினைந்த

பிணைக்கை கைதிகளாய் பிள்ளைகள்

சிப்டுகளால் சின்னாபின்னமான

சில்லரை சிறார்கள்

சாயப்பட்டறைகளில்

சாயங்கள் உடன் பல காயங்களுடன்

பிழைப்பை ஓட்டும் பிள்ளைகள்

கள்ளம் கபடம் இல்லா

"கன்று குட்டிகளை"

"காளைகளாக்கி"

காசு பார்க்க துடிக்கும்

கல் நெஞ்ச பெற்றோர்கள்

இதயம் வலிக்கிறது

இருந்தாலும் ஓர்

இதம், தொழிற்சாலை வாசலில்

”இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இல்லை”

Sunday, August 21, 2011

பகுத்தறிவு பகலவர்களே !!




சரணங்களின்
பொருள்
மாறுவதால்
தவறாகிப் போகும்

கீதங்கள்
எய்ட்ஸ் அரக்கனின்
சிறைப் பறவைகளாய் . . .
சில்லறைக் கனவுகளாய். .
மரண மேடையில்
மணம் இழந்த
மலர்களாய்
மனிதர்கள் சில … !!!

நாளைய
இந்தியாவை
நொறுகி போட துடிக்கும்
இன்றைய

‘இராவணன்’

மனிதத்துக்கும்
மருத்துவத்துக்கும்
நிர்ணியக்கப்பட்ட
மரண சவால்….. !!!

இலக்கற்ற
தடுமாற்றங்களில்
விளையும்
இயல்பற்ற
நரக வாழ்கை . . . . !!!

உடல் ஆசைகளையும்
உணர்ச்சிக்கு கலவரங்களையும்
உரசி
உயிரை பற்றவைக்கும்
ஊழித் தீ ! . . .

உணர்ந்தும்
உணராமலும்
செய்யும்
தப்புகளுக்கு
மீட்பே அளிக்காமல்
விரும்பி வரும் வேண்டாத
நோய் அரக்கன் . . . !

மனிதத்துக்கும்
மிருகத்திற்கும் இடையிலிட்ட
நூலிழையாம்
பகுத்தறிவை
பதம் பார்க்கும்
பாதகன்!!!!

மனிதமே !
மனிதமே
உன்னை தராசிலிட்டு
சீர்தூக்கிப் பார்க்க

ஒரு நிமிடமேனும் ஒதுக்கி
பகுத்தறிவு பகலவனுக்கு
உன் இதய வாசலை திறந்து வை

உன் ஆற்றலையும்
ஆர்வத்தையும்
நல்வழியில்
நடத்தி வாழ்கை கனியை
சுவைக்க
கற்று கொள்

காலம் உனக்கு
காதலையும்
காமத்தையும்
தெளிவு படுத்தும். . .

வாழ்கையை
காதலிக்க கற்று கொள்
காமம் தானே
முன்வந்து
எல்லை இட்டு கொள்ளும் . . !

இறைவன் தந்த பரிசான
உடலையும்
உயிரையும், வாழ்க்கையையும்
”உயர்” நிலை படுத்தி கொள்

ஆயின்

பகுத்தறிவு
நிரம்பி
மனிதத்துவம்
உயிர் பெறட்டும்
மகத்துவமாய்
ஜெகம் ஆளட்டும் . . . !!!

Friday, August 12, 2011

முதியோர் இல்லம்







மரத்தின் மடியில்
மகன்கள்
முதிர்ந்த இலைகள் சருகுகளாய்
முதியோர் இல்லத்தில் . . . . .