Popular Posts

Friday, October 19, 2012

ஆசை, மாணவனாக ஆசை

ஆசை


மாணவனாக ஆசை பள்ளி

மாணவனாக ஆசை

தோளோடு தோள் கொடுத்த தோழமையுடன்

தொலைதூரம் தொலைந்து போக ஆசை

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி

குட்டி கரணம் அடித்து குட்டி ஆற்றில்

குதூகலமாய் குளிக்க ஆசை

வகுப்பு நேரத்தில் வகடு எடுத்த தலையுடன் நெற்றியில்

வண்ணமாய் தேசிய கொடிபோல் திருமண் இட்டு

கோவிலுக்கு சென்று வந்த்தாய் பொய்யுரைத்து அனைவருக்கும்

பிரசாதம் கொடுப்பதாக கூறி வகுப்புக்கு முழுக்கு போட ஆசை

கணக்கு வாத்தியாரின் காலனியை காணாமல் போக வைத்து

கணக்கு வகுப்பை காலனி தேடும் வகுப்பாக மாற்ற ஆசை

வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் இருந்த வசை செயல்களை

வாய்ப்பாக செய்ய ஆசை

ஆசை பட்ட அனைத்தும் கிடைக்குமா இனி ?

கையில் ஆசை சாக்லேட் உடன் விழித்து எழுந்தேன்

என் பள்ளி பழைய மாணவர்கள் 25ம் ஆண்டு விழாவில்

ஏம்பா நீ தான் நன்றியுரை என்று கூறும் போது.

கண்ணீர் மல்க நன்றியுரை (கண்ணீர்யுரையாக....)

Wednesday, February 15, 2012

இந்த மிசின் என்ன வெல கண்ணு !!!




இன்று காலை வழக்கம் போல ஒரு தனியார் பேருந்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன், அப்போது 50 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் என் சீட்டிற்கு அருகில் வந்து அமர்ந்தார், கொங்கு மண்டலத்திற்கு உரிய பொன் முறுவழுடன், என்னிடம் ஏன் கண்ணு கோபியா போறிங்க... என்றார்..

அதற்கு நான் செயற்கையான சிரிப்புடன் தலையசைத்தேன் . .
பஸில் "உன் நண்பன் போல யாரு மச்சான்"".... என்ற பாடல் காது மட்டும் இன்றி இதயம் அதிரும் படியாக ஒழித்து கொண்ருந்தது
நான் பாடலுக்கு ஏறார் போல தலை அசைத்து கொண்ருந்தேன்.

அந்த சமயத்தில் என் செல்போன் அதிர்ந்தது,
எதிர் முனையில் என் நண்பன் அவரது அலுவலக சம்பந்தமாக 5 நிமிடம் பேசினார், பேசி கொண்டிருக்கும் போதே அருகில் இருந்த பெரியவர் என்னிடம் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முற்பட்டார். நான் சைகையால் கொஞ்சம் பொறுங்கள்.... போன் பேசிவிட்டு , உங்களுடன் பேசுகிறேன் என்றேன்.
அதனை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என நான் புரிந்து கொண்ட போது. என்னை பரிதாபமான பார்வையுடன் மேலும் கீழுமாக பார்த்து கொண்டிருந்தார் ( நான் எதோ தனியாக பேசி கொண்டிருபது போல அவர் நினைத்து கொண்டு),
நான் போன் பேசி முடிக்கும் வரை என் முகத்தையம் காதையும் பார்த்து கொண்டிருந்த அவர்
என்னை பார்த்து ம் ம் .. கடவுள் ஏன் இப்படி உங்கள சோதிகிரானு தெரியல தம்பி ..
இந்த வயசுல இப்படியா ? . . என்றவரை

நான் ஐயா புரியவில்லை என்றேன், அதற்கு அவர் என் காதை பார்த்து ....
ஏன் தம்பி இந்த மிசின் என்ன வெல கண்ணு !!! என்றார்.
ஒரு நிமிடம் எனக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரிய வில்லை, எவ்வளவோ அடக்கியும் என்னால் சிரிக்காமல்
இருக்க முடியவில்லை,
என் காதில் இருந்த ப்ளுடூதை கையில் எடுத்து கொண்டு பெரியவரிடம் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து,
ஐயா இது அந்த (செவிட்டு ) மெசின் இல்ல , செல் போன்ல பேசிற மெசின் என்றேன், அவர் சிறிது நேரம் கழித்து புரிந்து கொண்டு , தப்பா கீது எதுவும் நெனைசிறாதிங்க தம்பி.

என் பேத்திக்கு காது கொஞ்சம் சரியா கேக்காது , அவளுக்கு டாக்டர பார்த்து ஒரு மெசின் வாங்கி கொடுத்தோம் ஆனா அவ அத காதுல மாட்டுறது கிடையாது , பெருசா இருக்காம் செவிட்டு மிசின் மாட்ரிகானு எலோரும் அவல கிண்டல் அடிகிரங்கலாம்,

அதான் நீங்க மாட்டி இருக்கிற மாதிரி ஒரு மெசின் கிடைசா நல்ல இருக்கும்னு பாத்தேன் அதான். ம் ம் ...

அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலத்துலயும் இப்படி ஒரு பெரியவர் என்று நினைத்து கொண்டு , பஸ் அறுபது அடி சாலை வரும் போது அங்கு இருந்த ஒரு (hearing aid centre) கடையை காண்பித்து இங்கு அந்த மெசின் வாங்கலாம் என்று கூறி விட்டு ,

இந்த செவிட்டு மெசின் இல்ல இல்ல ப்ளுடூதை ஆன் லைனில் வாங்கி கொடுத்த நண்பர் ராம்ஸ் மற்றும் அதனை கட்டாயம் வாங்க சொன்ன நண்பர்களையும் மனதிற்குள் நினைத்து ( திட்டி!!! உன் நண்பன் போல யாரு மச்சான்.... ) கொண்டு பஸில் இருந்து இறங்கினேன்.

Monday, August 22, 2011

பின்னலாடை பிணைக்கைதிகள் !!!



பின்னலாடை பிணைக்கைதிகள் !!!

"திரு"ப்பூர்

மரியாதை மிகுந்த ஊர்

மரியாதை மிகுந்த மனிதர்கள் வாழும் ஊர்

பின்னலாடையில் பின்னி பினைந்த

பிணைக்கை கைதிகளாய் பிள்ளைகள்

சிப்டுகளால் சின்னாபின்னமான

சில்லரை சிறார்கள்

சாயப்பட்டறைகளில்

சாயங்கள் உடன் பல காயங்களுடன்

பிழைப்பை ஓட்டும் பிள்ளைகள்

கள்ளம் கபடம் இல்லா

"கன்று குட்டிகளை"

"காளைகளாக்கி"

காசு பார்க்க துடிக்கும்

கல் நெஞ்ச பெற்றோர்கள்

இதயம் வலிக்கிறது

இருந்தாலும் ஓர்

இதம், தொழிற்சாலை வாசலில்

”இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இல்லை”

Sunday, August 21, 2011

பகுத்தறிவு பகலவர்களே !!




சரணங்களின்
பொருள்
மாறுவதால்
தவறாகிப் போகும்

கீதங்கள்
எய்ட்ஸ் அரக்கனின்
சிறைப் பறவைகளாய் . . .
சில்லறைக் கனவுகளாய். .
மரண மேடையில்
மணம் இழந்த
மலர்களாய்
மனிதர்கள் சில … !!!

நாளைய
இந்தியாவை
நொறுகி போட துடிக்கும்
இன்றைய

‘இராவணன்’

மனிதத்துக்கும்
மருத்துவத்துக்கும்
நிர்ணியக்கப்பட்ட
மரண சவால்….. !!!

இலக்கற்ற
தடுமாற்றங்களில்
விளையும்
இயல்பற்ற
நரக வாழ்கை . . . . !!!

உடல் ஆசைகளையும்
உணர்ச்சிக்கு கலவரங்களையும்
உரசி
உயிரை பற்றவைக்கும்
ஊழித் தீ ! . . .

உணர்ந்தும்
உணராமலும்
செய்யும்
தப்புகளுக்கு
மீட்பே அளிக்காமல்
விரும்பி வரும் வேண்டாத
நோய் அரக்கன் . . . !

மனிதத்துக்கும்
மிருகத்திற்கும் இடையிலிட்ட
நூலிழையாம்
பகுத்தறிவை
பதம் பார்க்கும்
பாதகன்!!!!

மனிதமே !
மனிதமே
உன்னை தராசிலிட்டு
சீர்தூக்கிப் பார்க்க

ஒரு நிமிடமேனும் ஒதுக்கி
பகுத்தறிவு பகலவனுக்கு
உன் இதய வாசலை திறந்து வை

உன் ஆற்றலையும்
ஆர்வத்தையும்
நல்வழியில்
நடத்தி வாழ்கை கனியை
சுவைக்க
கற்று கொள்

காலம் உனக்கு
காதலையும்
காமத்தையும்
தெளிவு படுத்தும். . .

வாழ்கையை
காதலிக்க கற்று கொள்
காமம் தானே
முன்வந்து
எல்லை இட்டு கொள்ளும் . . !

இறைவன் தந்த பரிசான
உடலையும்
உயிரையும், வாழ்க்கையையும்
”உயர்” நிலை படுத்தி கொள்

ஆயின்

பகுத்தறிவு
நிரம்பி
மனிதத்துவம்
உயிர் பெறட்டும்
மகத்துவமாய்
ஜெகம் ஆளட்டும் . . . !!!

Friday, August 12, 2011

முதியோர் இல்லம்







மரத்தின் மடியில்
மகன்கள்
முதிர்ந்த இலைகள் சருகுகளாய்
முதியோர் இல்லத்தில் . . . . .

Monday, July 18, 2011

பட்டாம் பூச்சு




பட்டு பட்டு

பட்டாம் பூச்சுகளுக்கு (பெண்கள்)

பட்டு நுழால் பட்டாடை

பரிதவிக்கிறது மனம்

பட்டு பூச்சுகளுக்கு,

உயிரை கொன்று

உயிரற்ற உறைகளில்

உயிர் நூலால்

உடை ஒன்று தேவையா- கேட்கிறது

பட்டாம் பூச்சு

புலன்களை மறைக்க

ஆடை தேவை

உயிரை கொன்று

உயிரை வளர்க்க வேண்டுமா?

மல்பெரி கேட்கிறது


நவரச ரசிகன்


ரசிகன்

"ரசி" த்தான் ரகளை ஆனது

"ருசி" த்தான் ருத்தர தாண்டவம் ஆனது

"பசி" த்தான் பரலோகம் சென்றான்

"குஷி" தான் நடிகனுக்கு

ரசிகனை ரசிக்க வில்லை

ரசம் குடிக்கும்

ரதிகளின் கனவு நாயகனுக்கு...